Thursday 30 January 2020


அன்புத் தோழர்களே ,
அனைவருக்கும் எங்கள் தோழமை வணக்கம். 31-01-2020அன்று விருப்ப ஓய்வில் செல்ல இருக்கிறீர்கள் ,உங்கள் அனைவரையும் வாழ்த்தி வழி அனுப்புகிறோம். பணியில் இருந்த பொது நாம் பல சங்கங்களில் உறுப்பினராக இருந்து சங்கத்தின் மேன்மைக்கும், ஊழியரின் உயர்விற்கும் பாடுபட்டிருப்போம். ஒய்வு பெற்றபின் அனைவரும் சங்க வேறுபாடின்றி  , சாதி, மத , இன ,மொழி வேறுபாடில்லாமல் ஓய்வூதியர்களின் நலன் , அவர்களின் உயர்வு ஒன்றையே கருத்தாக கொண்டு ஓயாமல் பாடுபடும் AIBSNLPWA  வில் இணைந்திடுக.இச்சங்கத்தில் ஒய்வு பெற்ற CGM  முதல் RM வரை அனைவரும் சமமே 
AIBSNLPWA  சங்கம்தான் அகில இந்தியாவில் மிக அதிகமான உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஓய்வூதியர் நல சங்கமாகும். 
AIBSNLPWA  சங்கம்தான் 68.8% IDA வில் ஓய்வூதிய மாற்றம் பெற்றுத் தந்தது.78.2% IDA வில் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்ந்தபின் ஓய்வூதியர்களுக்கும் நீண்ட நாட்கள் போராடி, வாதாடி 10-06-2013 லிருந்து நிலுவை த்தொகையுடன் பெற்றுத் தந்தது.
AIBSNLPWA  சங்கம்தான் ஓய்வூதியத்திற்கு தடையாக இருந்த 60:40 சிக்கலை நீக்க பாடுபட்டு பின் வெற்றியும் பெற்றது.
AIBSNLPWA  சங்கம்தான் ஓய்வூதியர்களுக்கும் குவார்ட்டர்ஸ்  வசதியை பெற்றுத்தந்தது.
AIBSNLPWA   சங்கம்தான் ஓய்வூதியர்களுக்கு வவுச்சர் இல்லாமல்  மருத்துவ அளவன்ஸை மீண்டும் வாங்கித் தந்தது.
 AIBSNLPWA சங்கம்தான் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நமக்கும் கிடைத்திட அயராது பாடுபட்டு வருகிறது. இதில் வெற்றி பெற்றுவிட்டால் இனி வருங்காலத்தில் மத்திய அரசு எப்போதெல்லாம் ஊதியக்குழு அமைக்கிறதோ அப்போதெல்லாம் நமக்கும் அந்த பரிந்துரைகள் அமல் படுத்தப்படும் .
இது போன்று இன்னும் பலப்பல சலுகைகளை பெற்றுத் தந்தது.
வாருங்கள் தோழர்களே நாம் ஒன்றாக இணைந்து ஓய்வூதியர் நலத்திற்கு பாடுபடுவோம்.
பொன்னான எதிர்காலத்தை உண்டாக்கிட, கண்ணான AIBSNLPWA சங்கத்தில் இணைந்திடுக. 
தோழமை வாழ்த்துக்களுடன்,
AIBSNLPWA ,
மாநில சங்க நிர்வாகிகள் .
சென்னை மாவட்ட மாநிலம் 
சென்னை.









Wednesday 29 January 2020

வருந்துகிறோம்
 நமது  AIBSNLPWA சங்கத்தின் செங்கல்பட்டு கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர் S.கலைமணி  அவர்கள்  29.01.2020 இன்று காலை சுமார் 08.05 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் அன்னாரின் இறுதி சடங்கு 30.01.2020 காலை சுமார் 10.30 மணியளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
விலாசம்ஃஃ ராமகிருஷ்ணா நகர்,
வல்லம், 
செங்கல்பட்டு
தொடர்பு..94440 26224


Friday 24 January 2020

 FLASH ...FLASH

OUR ANOMALY CASE 

Delhi High Court has dismissed the Appeal from Dept.  We just now received the following  message from our lawyer Sh. Ranvir Singh:

" The judgement was delivered today, the 24th January 2020 rejecting the appeal WP ( C ) No. 10019 of the Union of India.
2. The judgement is running in 20 pages. Second last para states clearly that the administrative instructions are invalid against the Statutory Provisions.
3. In the last para, eight weeks time is given to the respondents to make the payment In Terms of the Government Order of 1999".
....
CONGRATULATIONS TO ALL.
ANOTHER VICTORY FOR AIBSNLPWA.
...P Gangadhara Rao, GS.

Monday 20 January 2020

கோடம்பாக்கம் கிளை கூட்டம் 18-01-2020 அன்று மாலை 5 -00 மணி அளவில் தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் துணைத்தலைவரும் , அகில இந்திய பொருளாளருமான தோழர் TS விட்டோபன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.  கிளை செயலர் தோழர் சாம்பசிவம் அனைவரையும் வரவேற்று , கிளை செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார் . அகில இந்திய துணைத்தலைவர் தோழர் G . நடராஜன் , மாநில செயலர் தோழர் S .தங்கராஜ் , மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் , மாநில உதவி செயலர்கள் தோழர்கள் ரங்கநாதன் , வள்ளிநாயகம்  மற்றும் அண்ணாநகர் கிளை செயலர் தோழர்.V.N. சம்பத்குமார் , வில்லிவாக்கம் கிளை செயலர் தோழர் .A.S வைத்யநாதன், வில்லிவாக்கம் கிளை உதவி செயலர் தோழர் அசோக் குமார்  ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 
கிளை உறுப்பினர்கள் சிலரின் பிரச்சினைகளைத் தீர்க்க பேருதவி புரிந்த வில்லிவாக்கம் கிளைத் செயலர் தோழர் A.S வைத்யநாதன் அவர்கள் பாராட்டப்பட்டு மாநில நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி , நினைவு பரிசு வழங்கப்பட்டது .
காலம் , நேரம் பாராது அனைத்து கிளை நிர்வாகிகளையும் கலந்து பேசி, VRS ல் செல்ல இருக்கும் ஊழியர்கள் பட்டியலை அளித்து , அவர்களின் கைப்பேசி மற்றும் விலாசங்களை அளித்து அவர்களை சந்தித்து நம் உறுப்பினர் ஆக்கிட பணித்து , ஊக்கப்படுத்திய மாநில பொருளாளர் தோழர் M கண்ணப்பன் அவர்களின்  பணியினை பாராட்டி மத்திய சங்க நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு பரிசாக ஒரு கைக்கடிகாரம் அளிக்கப்பட்டது. பலத்த கைத்தட்டல் அரங்கு எங்கும் நிறைந்து இருந்தது.
சுமார் 10 மகளிர் உறுப்பினர்கள் உட்பட 80 தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சுவையான இனிப்பு, காரம் , காபி அளிக்கப்பட்டது.
தோழர் பார்த்திபன் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

Tuesday 14 January 2020

Msg from 
Com C. K. Mathivanan, 
Circle Secretary 
Chennai Telephones.
AIBSNL PWA is our friendly association of BSNL Pensioners. It is striving hard to get the Pension Revision to all BSNL Pensioners who were opted to BSNL as on 01-10-2000. We appreciate its undaunted attempts to improve the lives of Pensioners without any politicial agenda or subserving the interests of Political Masters unlike other pensioner Associations in BSNL. Hence we advise all our comrades to enroll in the AIBSNLPWA immediately as thousands of our members are going to retire on 31-01-2020 through VRS- 2019.
    As a good will gesture our Chennai Telephones Circle Union has decided to link the both Tamilnadu / Chennai Telephones AIBSNL PWA websites in to our " nftechennai.org " website soon for mutual benefit of both membership of NFTE-BSNL and AIBSNL PWA. Hope our comrades will appreciate our decision.
C.K.M.
Dear Comrades on behalf of AIBSNLPWA, the greatest Pensioners' Association of BSNL Welcome you all with folded hands. We request you all to enroll yourselves as Life members in our Association. This is the association which had got 78.2% IDA merger benefits to all pensioners and also strived very hard to remove the hurdle block of 60:40. Now it is working hard to achieve the Pension Revision as per 7th Pension Commission recommendation implementation.
Come let us all join together and build a bright future to all Pensioners of BSNL. 
Once again we welcome you all whole heartedly and join in enmasse in this mighty Association.
With warm Fraternal Greetings,
S.Thangaraj,
ChTD Circle Secretary,
Chennai.
94442 99596




Sunday 12 January 2020

Com.D.Gopalakrishnan speaks on Video about the decisions taken in the recently held Central Secretariat Meeting at Bangaloru regarding our Pension Revision.
CLICK HERE
Click the above Link to listen his speech.


Saturday 11 January 2020

வில்லிவாக்கம் கிளையின் கூட்டம் இன்று 11-01-2020 மாலை கனகதுர்கா உயர் நிலைப்பள்ளி வில்லிவாக்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கிளை தலைவர் தலைமை தாங்கினார். முதலாவதாக மறைந்த கிளையைச்சார்ந்த தோழர்கள் மற்றும் முது பெரும் தொழிற்சங்க தலைவர் தோழர் OP குப்தா ஆகியோர் மறைவிற்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கிளையில் ஒரு பாராட்டத்தக்க முறையை மேற்கொண்டுள்ளனர். அதாவது தலைவர் தமது தலைமை உரையை ஒரு திருக்குறள் ஐ எடுத்து இயம்பி அதன் கருத்தையும் விலக்கிக் கூறி பின் தமதுரையை பரப்புகிறார். வாழ்க இந்த சீரிய முறை.
கிளை செயலர் எல்லோரையும் வரவேற்று பேசினார் .வெப் மாஸ்டர் தோழர் மோகன் தமதுரையில் ஸ்மார்ட் போன் வைத்துள்ள தோழர்கள் அனைவரையும் வில்லிவாக்கம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து சங்க செய்திகளை அவ்வப்போது தெரிந்துணர வேண்டினார்.மொபைல் போன் மூலமாகவே நம் இணைய தளத்தையும் கண்டு செய்திகளை விரிவாக,விரைவாக தெரிந்து கொள்ள அறிவுறுத்தினார். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் அசோக்குமார் , ரங்கதுரை ,ஜீவா ,அக்ஷய்குமார் மற்றும் கண்ணப்பன் மிக தெளிவாக , CGHS , mrs , vrs ல் செல்வோரை நம் சங்கத்தில் இணைக்க ஒவ்வொருவரும் எவ்வாறு பாடுபட வேண்டும்? மத்திய சங்கம் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நமக்கும் கிடைக்க செய்ய எடுத்துள்ள வழிமுறைகளை எடுத்துக்கூறினார்கள் . இன்றைய கூட்டத்தில் முன்னாள் மத்திய பொருளாளர் தோழர் குணசேகர், அண்ணா நகர் கிளை செயலர் தோழர் சம்பத்குமார் மற்றும் சைதை தோழர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் அனைவருக்கும் சுவைமிகு  இனிப்பு, காரம் ,தேனீர் ஆகியவை வழங்கப்பட்டன.பொங்கல் வேலைகளுக்கிடையே சுமார் 70உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
கிளை பொருளாளர் தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அனைத்து நிழற்படங்களையும் காண இங்கே கிளிக் செய்யவும்.



Friday 10 January 2020


அகில இந்திய பிஎஸ்என்ல் ஓய்வூதியர் நலச்சங்கம், சென்னை மாநிலம் திருநின்றவூர் கிளையின் (AIBSNLPWA CHTD Circle Tirunintravur Branch)  ஜனவரி 2020 ஆண்டின் முதலாவது கூட்டம் 08-01-2020 புதன்கிழமை  கிளையின் தலைவர் தோழர் வீராசாமி அவர்கள் தலமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

மாநில நிர்வாகிகள் தோழர் S.கிருஷ்ணமூர்த்தி, தோழர் ஜீவானந்தம், தோழர் அட்சயகுமார், அண்ணா நகர் கிளையின் செயலாளர் தோழர் V.N.சம்பத்குமார்,  குரோம்பேட்டை கிளையின் செயலாளர் தோழர் R.மாரிமுத்து, மற்றும் திருநின்றவூர் கிளையின் 68க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கு பெற்று சிறப்பித்தார்கள்.

கிளையின் தலைவர் தோழர் வீராசாமி அவர்கள் பங்கு பெற்ற அனைவருக்கும் திருநின்றவூர் கிளையின் சார்பாக 2020ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துகள், மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

கிளையின் மறைந்த உறுப்பினர்கள் தோழர் சுந்தரேன், தோழர் பக்தவத்சலம், தோழர் சுந்தரம், தோழர் பாண்டியன் துணைவியார் ஆகியார்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும், தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தோழியர் பிரேமாவதியின் கணவர் விரைவில் குணமடையயும் கூட்டு பிரார்த்தனையும், டிசம்பர் & ஜனவரியில் பிறந்த நாள் கொண்டாடும் கிளையின் உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில்  கிளையின் புதிய ஆயுள்உறுப்பினர் தோழியர் வசந்தகுமாரி (Retired Chief Accounts Officer MRS) அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

கிளையின் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் தற்போது கிளையின் அமைப்பு நிலை, இந்த மாதம் இறுதியில் வெளிவரும் விஆர்ஸ் (VRS)ல் BSNL  பணியாளர்களை நமது சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு கிளையின் உறுப்பினர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.

இன்றைய கூட்டத்தில்  சிறப்பு விருந்தினர்களாக அண்ணா நகர் கிளையின் செயலாளர் தோழர் சம்பத்குமார், தோழர் ஜீவானந்தம்,  தோழர் கிருஷ்ணமூர்த்தி, தோழர் அட்சயகுமார் ஆகியோர் நமது உறுப்பினர்களின் முக்ய பிரச்சனைகளான ஓய்வூதிய மாற்றம், BSNLMRSல் இருந்து  CGHSக்கு மாற்றல் தவிர நமது உடல் ஆரோக்யம் காத்தல் போன்ற தலைப்புகளில் ஏற்புரையாற்றினார்கள்.

கிளையின் பொருளாளர் தோழர் ஸ்ரீனிவாசன் நன்றியுரை உடன் இன்றைய கூட்டம் இனிதே நிறைவு அடைந்தது.

இன்றைய கூட்டத்தின் சில புகைப்பட பதிவுகளை கீழே காணலாம்.

நன்றியுடன்,
கிளையின் செயலாளர்
தோழர் லோகநாதன் 







Thursday 9 January 2020

One Increment Case has been postponed to 11-02-2020.
S.Thangaraj.,
Circle Secretary
Chennai Telephone Circle.

On 07-01-2020, Comrades P.S.Ramankutty, D.Gopalakrishnan, K Muthiyalu, G Babu, G Natarajan, R Changappa, V Rathna and Radhakrishna  met Lawyer in Bangalore and discussed elaborately for nearly 90 minutes about various aspects of filing a case for pension revision in Bangalore CAT.
Lawyer opined that there is a strong merit in our demand.
All participants were unanimous in their opinion that the lawyer is able to understand our case and give proper guidance.

On 08/01/2020, the following CWC members were present in the Secretariat meeting:
PSR, DG, Babu, Natarajan, Gangadhara Rao, Muthiyalu, Varaprasad, Vittoban, Ramarao, Rethna, Radhakrishna, R Venkatachalam, R Changappa and S Thangaraj.
 Com A.Sukumaran  could not attend due to health reasons.

Discussion with the lawyer on 7th and present situation on pension revision were reviewed.  All the 14 CWC members expressed their opinion on future course of action.
All except two were unanimous to seek legal remedy for pension revision immediately in Bangalore CAT.
 Kanyakumari CWC in February 2019 had decided to seek legal remedy as a last resort. That stage has come now,  was the opinion of  them.
 So, it was decided accordingly, subject to ratification by CWC.
 P Gangadhara Rao, GS
AIBSNLPWA.
09.01.2020.

Wednesday 8 January 2020

OBITUARY
With grief filled heart we bring the sad demise news of Smt.M.V. Gowri's husband  to the 8th Jan 2020 at 0630 hours.
Our heart felt condolences to the bereaved family and pray the almighty to keep his soul at rest.
Address
 6/319 Valayapathi Salai 
Mogappair East. 
Near velammal School.
Chennai -37 .

  It is reliably learnt that our  All India Membership Strength  as on date has crossed  74000 + . Thanks to all our members.