Friday 30 November 2018

22-11-2018 அன்று நமது உண்ணாவிரத போராட்டம் முடிந்த பிறகு தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்ட மாநில சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்ததற்கு இணங்க மாவட்ட சங்கங்கள் நன்கொடை அனுப்பியுள்ளன .மாவட்ட செயலர்கள் கொடுத்துள்ள தகவல் பிரகாரம் 6 லட்சத்திற்கு மேல் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் .  இதுவரை சென்னை தொலைபேசி மாநிலம் - ரூ 1 லட்சம் , சேலம் மேற்கு - ரூ 1 லட்சம் , வேலூர் - ரூ 50 ஆயிரம் , கோவை - ரூ 20 ஆயிரம், தூத்துக்குடி - ரூ 20 ஆயிரம், சேலம் கிழக்கு -ரூ 10 ஆயிரம் , கடலூர்  ரூ 25 ஆயிரம், காரைக்குடி - ரூ 20 ஆயிரம், மதுரை - ரூ 25 ஆயிரம், மத்திய சங்கம் - ரூ 20 ஆயிரம், தமிழ் மாநிலம் - ரூ 50 ஆயிரம் என பணம் அனுப்பியுள்ள. 
தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்களுக்கு தலா 2 புடவைகள், 2 உள்ளாடைகள் , 2 லுங்கிகள் ,2 போர்வைகள், 2 துண்டுகள், பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து பணமும் கொடுக்கப்பட்டு விட்டது. மேலும் தேவைப்படுகிற உணவுப்பொருட்கள், மெழுகு வத்தி, தீப்பெட்டிகள் ஆகியவைகளும் வாங்கி எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஓரிரு நாட்களில் பட்டுக்கோட்டையில் உள்ள தோழர் சிவ சிதம்பரம் அவர்களிடம் அனுப்பி வைக்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் 3 அல்லது 4 தேதிகளில் தஞ்சை மாவட்ட தோழர்களுடன் தமிழ் மாநில தலைவர் , மாநில செயலர், மாநில பொருளாளர், மத்திய சங்க துணை பொது செயலர் , சென்னை தொலைபேசி மாநில நிர்வாகிகள் குழு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
STR  சென்னை ரூ - ஒரு லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. நிவாரண நன்கொடை பெற விரைந்து நடவடிக்கைகள் எடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கு பாராட்டுக்கள் .
தோழமை வாழ்த்துக்க
ள். 

When appeals were given by the Secretary and Treasurer For Gaja Cyclone Disaster relief Fund, STR members poured money like anything and the total has crossed Rs. 1,10,000/- 
(One  lakh and ten thousand) and still the fund is growing. The credit goes to all our esteemed members.

Comrades please Keep the flame of STR glowing on and on!!!

Monday 26 November 2018

Memorandum submitted  today to  Sri Pradhan, CCA TNCircle addressed to Secretary,  DOT,  NewDelhi. by
Comrades K. Muthialu, Deputy General Secretary,  V. Ramarao, Tamilnadu Circle President, R.Venkatachalam, Tamilnadu Circle Secretary and  S. Thangaraj, Circle Secretary , Chennai Telephone Circle. 
CCA sincerely interacted and shared his, views.

Saturday 24 November 2018

Bi-monthly meeting of Mylapore Branch was conducted at 1630 hours in Fourth Saturday in RA Puram Telephone Exchange. Branch President Com. P.E.Kannaiyan presided over the meeting and Secretary Com. Bhaskaran welcomed the gathering. First one minute silence was observed for the departed souls. He then introduced four new life members to the house.
Recently elected CHQ Vice President Com.G.Natarajan, Assistant General secretary Com. V.Rathna, CHQ Treasurer Com.T.S.vittoban spoke on the occasion and stressed for the unity among pensioners and urged to increase the strength to achieve the goals. ChTD Treasurer Com.M.Kannappan in his address narrated the disaster caused by the Gaja storm in the Delta areas and requested the members to donate liberally to wipe off their tears. Immediately the money has poured and many members rushed to donate their mite and a huge sum of more than six thousand + was collected . More amount for the noble cause is assured by the members. Com. Moorthy  ex president of ChTD circle president also spoke on the occasion. Fitting vote of thanks was offered by Com.Khaja. 
            Four New Life Members standing along with the Secretary










Friday 23 November 2018

கடந்த வாரம் கஜா புயல் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் , திருவாரூர் , தஞ்சாவூர் , புதுக்கோட்டை ,கடலூர் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவினை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை , வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் அழிந்துள்ளன.ஏராளமான வீடுகள் , குடிசைகள் , கட்டிடங்கள் இடிந்து போயுள்ளன , சேதமடைந்துள்ளன .கடும் புயலின் கோரத்தாண்டவத்தில் ஏறத்தாழ 100 பேர் பலியாகி விட்டனர். நமக்கு வாழ்வாதாரமாக இருந்த ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் பலியாகி உள்ளன. பல மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து அடிப்படை மின் வசதிகள் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. உண்ண உணவின்றி , குடிக்க நீரின்றி தவித்து வருகின்றனர் இங்கு வாழ்ந்து வரும் மக்கள்.
இந்தப் பேரழிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நமது ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பில் உடனடியாக உதவுகின்ற வகையில் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று , ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்த பிறகு தமிழ்நாடு , சென்னை தொலைபேசி மாநிலம் மற்றும் சில மத்திய சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து நிதி உதவி வழங்க அறைகூவல் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட செயலர்கள், சென்னை தொலைபேசி மாநில கிளை செயலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வார இறுதிக்குள் நிவாரண நிதியை மாநில சங்கங்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் அறைகூவல் விடுக்கிறோம்.
பாதிக்கப்பட்டோரின் விழி நீரைத் துடைக்க , இரு கரம் நீட்டுவோம். 
அவர்தம்  துயர் நீக்க அள்ளித்தருவோம் வெள்ளிப்பணத்தை. 
தோழமையுள்ள 
ஆர்.வெங்கடாசலம் , எஸ். தங்கராஜ்.
மாநில செயலர்கள்.


Thursday 22 November 2018

சமீபத்தில் பூரியில் நடைபெற்ற  அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இன்று (22-11-2018) சென்னை-8, எத்திராஜ் சாலையில் இருக்கும் CCA அலுவலக வளாகத்தில், தமிழ்மாநில மற்றும் சென்னை தொலைபேசி மாநில அனைத்திந்திய ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் சார்பில்  நடத்தப்படும்  ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் காலை 10-30 மணிக்கு துவங்கியது. பலத்த காற்று, கன மழை என்று சென்னையை பயமுறுத்திய மழை, ஆட்டோக்கள் கிடைக்காத நிலை, நடக்குமா நடக்காதா என்ற ஐயம் உறுப்பினர் மனங்களில் வாட்டிய நிலையில் எப்படியும் இதை நடத்தியே தீருவோம். இது அகில இந்திய அறைகூவல் எது வரினும் அஞ்சோம் என்ற உறுதிப்பாட்டில் கிஞ்சித்தும் அசராமல் உண்ணா விரத போராட்டம் நடத்தப்பட்டது. விண்ணதிரும் கோஷங்கள் பின் தலைவர் உரையாற்றும் போதே பெரு மழை மிரட்டியது. போடப்பட்டிருந்த ஷாமியானா ஒழுக துவங்கியது.
மாற்று இடம் தேடி மழையில் நனைந்தபடியே கார் ஷெட்டில் தஞ்சமடை நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழ் மாநில தலைவர் தோழர் ராமராவ் மற்றும் சென்னை தொலைபேசி மாநில தலைவர் தோழர் முனுசாமி அவர்களின் சீரிய தலைமையில் , சென்னை தொலைபேசி மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் வரவேற்புரையாற்ற , அகில இந்திய துணை பொதுசசெயலர் தோழர் முத்தியாலு உண்ணா நோன்பு போராட்டத்தை துவக்கி வைத்து பேருரையாற்றினார்.
அகில இந்திய துணைத்தலைவர் தோழர் நடராஜன் , அகில இந்திய உதவி பொதுசசெயலர் தோழியர் ரத்னா , தமிழ் மாநில செயலர் தோழர் வெங்கடாசலம், சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் தங்கராஜ், STR கோட்ட செயலரும் தமிழ் மாநில உதவி செயலாளருமான தோழர் சுந்தரகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநில பொறுப்பாளர்கள் தோழர் ரங்கநாதன், டோமினிக் , ஜீவானந்தன் ,தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் ,ஆகியோர் பேசினார்கள்.
தோழர் டி ,பாலசுப்ரமணியன், பொது செயலர், அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, அவர்கள் ஒரு சிறப்பு சொற்பொழிவாற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பழச்சாறு வழங்கினார். தமிழ்மாநில துணைத்தலைவர் தோழர் விக்டர்ராஜூ அவர்கள் நன்றி நவில , உண்ணா நோன்பு போராட்டம் முடிவடைந்தது.
உண்ணாவிரதத்தில்  400 உறுப்பினர்களுக்கும் கூடுதலாக  கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.


  It is reliably learnt that our  All India Membership Strength  as on date has crossed  74000 + . Thanks to all our members.