Tuesday 30 July 2019

HOW TO GET CGHS CARD ?
                நன்றி : குரோம்பேட்டை கிளை 4 வது மாநாட்டு ஆண்டறிக்கை 
                                                                   Message From CHQ

Sunday 28 July 2019


Chromepet Branch conducted its Annual general Body Meeting in Ananda Kalyana Mandapam, Chromepet in a grand manner for which our TN CCA Shri. Chittaranjan Pradhan was invited to address the meeting. He was kind enough to accept our invitation and attended the Conference and delivered a very good remarkable speech.
In his keynote address in the Chromepet branch Conference on 25th July 2019, Sri. Chittaranjan Pradhan, CCA, TN said that
1. He felt Happy to be amidst  BSNL Pensioners in large numbers & sought their blessings.
2. On 78.2% left out cases, which includes cases before CAT Madras Bench, few days back a parliamentary question was raised and reply sent to the Ministry. As such, as of now, unless Ministry clears the issue on the stand taken by TN CCA in consultation with PCCA, he could not respond to the Memorandum submitted by the Branch Association. However he will discuss the same with DOT authorities in the CCA's meeting scheduled tomorrow 26.07.2019 at Trivandrum
3. He elaborated the SAMPANN and its impact, which eased Pensioners to have their Pension credits in no time. He wanted Pensioners Association to provide feed back on SAMPANN.
4. He wanted the Pensioners and our Association to use Adalat for immediate  redressal of grievances, if any, in the forth coming Adalat scheduled on 23.08.2019.
5. His ultimate goal is to redress grievances of Pensioners in no time & to bring TN CCA as '0' complaint office.
6.He complimented Anantha Kalyana Mandapam owner Sri. CA Vasudeva Rao for having offered the Hall free for this Conference & on behalf of BSNL Pensioners he thanked him.
7. He is Happy to address such a good gatherings of Pensioners like this Conference on a given specific topic in the days to come.
8.He also said a separate section is formed in Dy.CCA office to provide pay matrix equivalent CDA scale to the individual Pensioner to facilitate them to enroll them to avail CGHS facilities & to determine subscription tariff by CGHS.
9. He complimented our Association for rendering exemplary Service to the Pensioner by active dedication & participation.
He spoke for about 40 minutes & had lunch with all Pensioners.



Saturday 27 July 2019

மைலாப்பூர் கிளை கூட்டம் இன்று ஆர்.கே நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கிளைத்  தோழர் P.E. கண்ணையன் தலைமை தாங்கினார் .  கிளை செயலர் தோழர் M. பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார் . AIFPA பொதுசசெயலர் தோழர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
அகில இந்திய துணைத்தலைவர் தோழர் G.நடராஜன் , மாநில செயலர் தோழர் S. தங்கராஜ் ,மாநில நிர்வாகி தோழர் வள்ளிநாயகம் , முன்னாள் மாநில தலைவர் தோழர் மூர்த்தி மற்றும் பலர் கந்து கொண்டு பேசினார்கள்.

Friday 26 July 2019

25-07-2019 அன்று சென்னையில் மத்திய சங்க செயலக கூட்டம் நடைபெற்றது. மத்திய சங்க தலைவர் தோழர் ராமன்குட்டி , பொதுசெயலர் தோழர் கங்காதர ராவ் , பொருளாளர் தோழர் விட்டோபன், துணை தலைவர்கள் தோழர் கோபாலகிருஷ்ணன் , நடராஜன் ,  சுகுமாரன் , துணைப்பொதுசெயலர்கள் தோழர் முத்தியாலு மற்றும் தோழர் வரப்பிரசாத் , உதவி பொது செயலர் தோழியர் ரத்னா , உதவி பொருளாளர் தோழர் ராமராவ் , தமிழ் மாநில செயலர் தோழர் வெங்கடாச்சலம் , சென்னை மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் ஆகியோர்
கலந்துகொண்டனர் .
 அதுபோழ்து நம் ஓய்வூதியர் பிரச்சினைகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன . நம்முடைய பிரதான கோரிக்கையான மத்திய ஏழாவது சம்பள குழு  பரிந்துரைகளின் அடிப்படையில்  ஓய்வூதிய மாற்றம் அடைந்திட எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன . 
அந்த விபரங்கள் விரைவில் மத்திய சங்க அறிக்கை மூலம் வெளி வரும்.


AIBSNLPWA குரோம்பேட்டை கிளையின் நான்காவது  மாநாடு ஆனந்தா கல்யாண மாளிகையில் கோலாகலமான முறையில் நடைபெற்றது. கிளை தலைவர் M.கிருஷ்ணகுமார் தலைமை  தாங்கினார். தோழர் வள்ளிநாயகம் அனைவரையும் வரவேற்றார்  சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் S.தங்கராஜ் வரவேற்புரை வழங்கி வாழ்த்தி பேசினார். அவர் தமது உரையில் 03-09-2011 அன்று சைதாப்பேட்டை கிளையில் இருந்து 35 உறுப்பினர்களுடன் குரோம்பேட்டை கிளை
 ஆரம்பிக்கப்பட்டது  இன்று அனைவரின் கடுமையான உழைப்பின் பயனாக 560 ஆயுட்கால உறுப்பினர்களுடன் குரோம்பேட்டை கிளை சென்னை மாநிலத்தின் மூன்றாவது பெரிய கிளையாக மிளிர்கிறது.தற்சமயம் சென்னை மாநில உறுப்பினர் எண்ணிக்கை 4000. விரைவில் முக்கிய இலக்கான 5000 ஐ நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறோம்  இக்கிளையிலிருந்து சுமார் 30 பேர்களுடன் காஞ்சி கிளையும் , 78 பேர்களுடன் செங்கல்பட்டு கிளையும் ஏற்படுத்தப்பட்டது.என்று பேசி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார் .
கிளை செயலர் தோழர் R மாரிமுத்து செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார் . ஒருமனதாக சபை அதனை ஏற்றுக்கொண்டது.. நிதிச் செயலர் தோழர் A.அடைக்கலராஜ் சமர்ப்பிக்க அவை அதை ஏற்றுக்கொண்டது.
மாநில தலைவர் தோழர் S.முனுசாமி , மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் , திருமதி லீலாவதி (DGM), திரு சித்தரஞ்சன் பிரதான் ( CCA  சென்னை )கிளையின் கௌரவ தலைவர் திரு G .செல்வம் , தோழர் சுந்தர் ( AIFPA பொருளாளர் ) மண்டப அதிபர் ஆகியோர்  வாழ்த்தி , கிளையின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள்  நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 
கிளை தலைவர்         : தோழர் S .கண்ணன் ,
கிளை செயலர்           : தோழர் R .மாரிமுத்து 
கிளை பொருளாளர் : தோழர் M .செல்வராஜ் .
இடைவேளை மதிய உணவுக்குப்பின் மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் ராமன்குட்டி, கங்காதரராவ் ,  கோபாலகிருஷ்ணன், விட்டோபன் , வரப்பிரசாத் , ரத்னா ,ராமராவ் , வெங்கடாசலம் , சுந்தர் ஆகியோர் பேசினார்கள் .
சுமார் 400 க்கு மேல் கலந்து கொண்ட இம்மாநாட்டில் வேளாவேளைக்கு டீ , காபி , சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டன .ஒரு கிளை மாநாட்டினை மாநில மாநாட்டிற்கு ஒப்பாக நடத்திய கிளை நிர்வாகிகள் அதிலும் தோழர் கிருஷ்ணமூர்த்தி மிகுந்த ஈடுபாட்டுடன் சுறுசுறுப்பாக காரியமாற்றியது மிகவும்  பாராட்டுதலுக்குரியது. அருமையான கல்யாண மண்டபம் , இதமான குளிர் பதனம் (A C ), சுவையான உணவு , அன்பான உபசரிப்பு ,நினைவுப் பரிசு , நிகழ்ச்சிகளை நடத்திய பாங்கு , தடையில்லா மின்சாரம் , தொல்லை தராத ஒலிபெருக்கி - மொத்தத்தில் அத்தனையும் முதல் தரமாக அமைந்திருந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய மாநாடு , தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது..
         தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் 




  It is reliably learnt that our  All India Membership Strength  as on date has crossed  74000 + . Thanks to all our members.