Saturday, 29 December 2018

SAMPANN நேரடி காணொளி ஒளிபரப்பு.
இன்று இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் ஓய்வூதியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பட்டுவாடாவை நேரடியாகவே அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்தும் SAMPANN ( SYSTEM FOR ACCOUNTING AND MANAGEMENT OF PENSIONS) திட்டத்தினை வாரணாசியில் காணொளி கண்காட்சி மூலம் துவக்கி வைத்து பேசினார். அந்த காணொளியினை நேரடியாக நேரடி ஒளி/ஒலி பரப்பு சென்னை அண்ணாசாலை தொலைபேசி நிலாயத்தில் உள்ள "ஹால் ஆப் இன்ஸபிரேஷன் " ஹாலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வாய்ப்பினை நம் சங்கம் அதன் தலைவர்கள் நல்ல முறையில் பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி வாரணாசியில் பிரதமரின் மற்ற அலுவல்கள் காரனாக துவங்க சற்று கால தாமதமானது.அந்த சமயத்தை பயன்படுத்தி PCCA மற்றும் CCA அவர்களுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. இந்த திட்டத்தின் சாதகங்களை தன் உரையில் எடுத்துரைத்தார் PCCA அவர்கள். 
நம்  சங்கத்தலைவர்கள் தோழர்கள் G.நடராஜன் , K.முத்தியாலு, T.S. விட்டோபன், V.ரத்னா , V. ராமராவ் , R. வெங்கடாசலம் , N.S. தீனதயாளன் , S. காளிதாஸ் , சென்னை தொலைபேசி மாநில M.முனுசாமி, S.தங்கராஜ் , M.கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள் .ஓய்வூதியர்களின் குறைகள் இந்த ஏற்பாட்டின் மூலம் விரைவில் தீர்க்கப்பட்டால்தான் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனக்கொள்ளலாம் . தபால் நிலையம் சேமிப்பு அக்கவுண்ட் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த திட்டம் விஸ்தரிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர்.
CCA திரு பிரதான் அவர்கள் பேசும்போது KYP  என்பது அத்தியாவசியமானதல்ல , KYP  விவரங்கள் இல்லாமலேயே ஓய்வூதியம் அவரவர் வங்கி /தபால் நிலைய அக்கவுண்டில் சேர்க்கப்படும். தபால் நிலைய கணக்குகளுக்கு SAMPANN ஐ விஸ்தரிக்க சற்று கால தாமதமாகும். தபால் நிலைய சேமிப்பு அக்கவுண்ட் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் பென்சனர்களை வங்கி க்கு மாறும்படி நாங்கள் கோரவில்லை ஆனால் அவர்களாகவே வங்கி யில் சேமிப்பு கணக்கு உண்டாக்கி அதன் வழியாக பென்ஷன் வாங்க முயற்சித்தால் நாங்கள் வரவேற்போம். ஓய்வூதியர்கள் குறைகளை களைய ஒவ்வொரு SSA தலைமையகத்திலும்  ஓய்வூதியர் குறைதீர்க்கும் மையம் ஏற்படுத்தப்படும். அம்மையங்களை பென்சனர்கள் அணுகி தங்கள் குறைகளை விரைவாக தீர்த்துக்கொள்ளலாம்.
பிறகு நேரடியாகவே காணொளி நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 100 தோழர்கள் இதனை கண்டு பயனுற்றார்கள் இத்திட்டத்தை செயல்படுத்த இன்னும் கால நிர்ணயம் செய்யப்படவில்லை.


No comments:

Post a Comment

  Dear comrades, Pensioners of BSNL/MTNL are very much worried about non-grant of increased Dearness Relief from 1/1/2026 and they suspect t...