Thursday 17 February 2022

 

தோழர்களே ,
சென்னை தொலைபேசி மாநில சங்கம் , மற்றும் தமிழ்நாடு மாநில சங்கமும் இணைந்து  சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்குத் தொடர்ந்த one increment case ல் நமக்கு சாதகமாக தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது . இத்தகவலை நம் வழக்கறிஞர் கூறினார் . தீர்ப்பின் நகல் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும். நம் சங்கத்திற்கு மேலும் ஒரு மகத்தான வெற்றி இது.
நம் AIBSNLPWA சங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான இமாலய  வெற்றி !.
இவ்வழக்கில் சிறப்பாக வாதாடியுள்ள நம் வழக்கறிஞர் திரு கார்த்திக் ராஜன் அவர்களை போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். இவ்வழக்கிற்கான நம் தரப்பு ஆதாரங்களை திரட்டிக் கொடுத்த நம் சங்க தலைவர்களை முன்னோடிகளை பாராட்டுகிறோம். பொறுமை காத்த அத்துனை தோழர்களுக்கும் நன்றி நவில்கிறோம் .
இத்தீர்ப்பின் மூலமாக சென்னை தொலைபேசி மாநிலத்தில் சுமார் 180 தோழர்கள் பலன் அடைவார்கள்.
தோழமை வாழ்த்துக்களுடன்
S . தங்கராஜ் ,
மாநில செயலர் ,
AIBSNLPWA
சென்னை மாநிலம்.


Sunday 13 February 2022

 

அண்ணாநகர் கிளை மாதாந்திர ஓய்வூதியர்கள் கூட்டம் இன்று காலை (12.02.22) 10 மணியளவில்  கிளைத் தலைவர் தோழர் செல்லையா தலைமையில் நடைபெற்றது.  தோழர் வி.என்.சம்பத்குமார்.கிளை செயலாளர். துவக்க உறை நிகழ்த்தினார்.
தோழர் சோமசுந்தரம், தோழர் ஜெ.ராஜேந்திரன், தோழர் வி.அசோக்குமார் ஆகியோர் சங்க வளர்ச்சி மற்றும் செயலாற்றும் விதத்தை பாராட்டியும் கூட்டுறவு சங்கம் ஓய்வூதியர் களுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க சங்கம் முயற்சி செய்ய வேண்டும் என கூறினார்கள்.
 மாநில பொருளாளர் தோழர் எம்.கண்ணப்பன்  UDC case தற்போதைய நிலைமை,one Increment  judgement reserve, CGHS ,pension Anomaly.pension revision, கிளை மாநாடு மார்ச் மாதத்தில் நடத்த முயற்சி செய்ய வேண்டும் எனவும், மாநில மாநாடு ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் விளக்க உரை நிகழ்த்தினார்.
சுமார் 70 தோழர் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.புதிய உறுப்பினருக்கு கதர் ஆடை அணிவிக்கப்பட்டது.
நன்றி நவில அடுத்த கூட்டம் வருகிற 12.03.22 நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

 

வில்லிவாக்கம் கிளை பிப்ரவரி மாத கூட்டம் 12-02-2022 அன்று மாலை 4-00 மணி அளவில் நடைபெற்றது .கிளைத்தலைவர் தோழர் கங்காதரன் தலைமை ஏற்று திருக்குறள் உரையுடன் துவக்கி வைத்தார்.சமீப காலத்தில்  மறைந்த  நம் தோழர்கள் , இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் மற்றும் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநில செயலர் தோழர் தங்கராஜ் மற்றும் மாநில பொருளர் தோழர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் வைத்தியநாதன் கிளை செயலர் துவக்க உரையுடன் ஆக்க பணிகளை எடுத்துரைத்தார். மார்ச் மாதம் 12ஆம் தேதி கிளை மாநாடு நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்  இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றார்.

கிளை உறுப்பினர்கள் தோழர் மோகன் ,தோழர் தேவேந்திரன் , தோழியர்  கெளரி ஆகியோர் பாராட்டி பேசினார்கள்

மாநில செயலர் தமதுரையில்  சென்னை மாநில சங்க சார்பில் தலைமைப் பொதுமேலாளரை சந்தித்து மருத்துவ பில்கள் பணப் பட்டுவாடா செய்ய வேண்டுகோள் வைத்தோம், அவரும் .ஆவண செய்வதாக உறுதி அளித்து 2019 மார்ச் லிருந்து 6 மாத காலத்திற்கான பணப் பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். நம் தோழர்கள் CGHS க்கு மாற வேண்டும். அதற்கான முன்பணத்தை BSNL நிர்வாகம் நேரடியாக CGHS க்கு அனுப்புவதாக நம் மத்திய தலைவர்களிடம் கூறியுள்ளது இந்த சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். சென்னை மாநில த்தில் உள்ள அனைத்து கிளைகளும் மார்ச் மாத இறுதிக்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடித்து விட வேண்டும் , மாநில மாநாடு 2022 ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது என்றார் . சென்னை மாநிலத்தின் 14வது கிளை, வில்லிவாக்கம் கிளையிலிருந்து பிரிக்கப்பட்டு மாதவரம் கிளை செயல்படும். இம்மாத இறுதியில் மாதவரம் கிளை அமைப்பு மாநாடு நடைபெறும் என்றார் .

மாநில பொருளாளர் தமதுரையில் வில்லிவாக்கம் கிளையின் செயல்பாடுகளை பாராட்டி , அதிக உறுப்பினர்களை சிறப்பித்த கிளை செயலரை வெகுவாக பாராட்டினார்.  பென்ஷன் அனாமலி கேஸ் ஒன்றை பதிவு செய்து சிறப்பாக வாதாடி வெற்றி பெற்று நான்காயிரத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு ஒய்வு பெற்று 20 ஆண்டுகள் கழிந்த பின்னும் லட்சக்கணக்கில் நிலுவைத்தொகை பெற்று தந்தது நம் சங்கம் மட்டுமே..பணப்பயன் பெற்றுள்ள பயனாளிகள் சிலர் நன்கொடை வழங்கி உள்ளனர். இன்னும் பலர் வழங்க வில்லை அவர்கள் தொடர்பு நம்மிடம் இல்லை . சென்னை மாநிலம் 5062 உறுப்பினர்களை கொண்டுள்ளது. கொரோனா தொற்று கொஞ்சம் குறைந்துள்ள நிலையில் VRS ல் வந்துள்ள தோழர்கள் அனைவரையும் நம் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு நம் சங்கத்தில் இணைய வைக்க வேண்டும் என்றார்.

VRS ல் ஒய்வு பெற்று நம்மிடம் சேர்ந்துள்ள தோழர் தேவராஜன் துண்டு அணிவித்து கவுரவிக்கப்பட்டார் .

60 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இன்றைய கூட்ட முடிவில், தோழர் அசோக்குமார் நன்றி நவில கூட்டம் இனிதே முடிவுற்றது.


Thursday 10 February 2022

 

In the near past 3 hospitals have been included in the List. They are mentioned as follows.,

1.  Dr.Rai Memorial Medical Centre , 526 Century Plaza,

Anna Salai,  Teynampet Chennai 18  is listed at Sl.No 14.,

 

2. Panimalar Medical College Hospital, Varadarajapuram,

Poonamallee, Chennai 123 is listed at Sl.No 15.,

 

3. SRM Medical College Hospital , Irungalur, Trichy 105

Is listed at Sl.No 18

CLICK HERE TO SEE THE LIST


Circle Executive Committee Meeting of ChTD  was conducted on 23-04-2024 in Jivana Jyoti Hall, Egmore in a grand manner. In spite of Chitra P...