Wednesday 30 March 2022

கோடம்பாக்கம் கிளை மாநாடு 26-03-2022 அன்று மாலை 3-30 மணி அளவில் தொலைபேசி நிலைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தேசியக்கொடி , சங்கத் கொடிகளை ஏற்றிய பிறகு அகில இந்திய பொருளாளர் தோழர் T .S . விட்டோபன் அவர்கள் தலைமை ஏற்றார் .கிளை செயலர் தோழர் சாம்பசிவம் அனைவரையும் வரவேற்று பேசினார் .அகில இந்திய துணை பொது செயலர் தோழர் K .முத்தியாலு சங்க வளர்ச்சி, செயல்பாடுகள் , விலைவாசி ஏற்றம் மற்றும் தொழிலாளர் பிரச்சினை குறித்து பேசினார்.

அடுத்து கிளைசெயலர் ஆண்டு அறிக்கையினையும்  மற்றும் பொருளாளர் தோழர் மீனாட்சி சுந்தரம் வரவு செலவு அறிக்கையினையும்  சமர்ப்பித்தார்கள் இரண்டுமே அவையினரால் கரவொலியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் பேசிய தோழர் விட்டோபன்  அவர்கள் சமீபத்தில் டில்லி சென்றிருந்த சமயத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் மற்றும் DOT செயலர் ஆகியோரை சந்தித்து ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நமக்கும் அளித்து ஓய்வூதிய மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்ததை , மிகவும் கவனத்துடன் நம் கோரிக்கைகளை கேட்டு ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளனர் என்று விரிவானதொரு  உரை நிகழ்த்தினார்

மாநில செயலர் நடப்பு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தினார் .தலைவராக தோழர் TRS.ஸ்ரீராம் , செயலாளராக சாம்பசிவம் , பொருளாளராக மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அகில இந்திய துணைத்தலைவர் தோழர் G.நடராஜன் , மாநில தலைவர் தோழர் முனுசாமி , மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் ஆகியோர் நேரம் கருதி சுருக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.

மாநாட்டில் வில்லிவாக்கம் கிளை செயலர் தோழர் வைத்தியநாதன், பொருளாளர் தோழியர் குணசுந்தரி  ரங்கநாதன் ,அசோக்குமார்  செங்கல்பட்டு கிளை தலைவர் ரங்கநாதன் , செயலர் தோழர் ஒளி , அண்ணாநகர் கிளை செயலர் தோழர் சம்பத்குமார் , குரோம்பேட்டை கிளை செயலர் மாரிமுத்து ,மாநிலத் துணைத் தலைவர் டொமினிக் , சுப்ரமணியம் , அமைப்பு செயலர் கோவிந்தராஜூலு ,ஆகியோர் கைத்தறி துண்டு அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

மாநாட்டின் முடிவு நிகழ்வாக தோழர் பார்த்திபன் கிளை உதவி செயலர் நன்றி நவில மாநாடு முடிவு பெற்றது.

மாநாட்டில் சுமார் 250 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி பரிமாறப்பட்டது.



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 


 









Saturday 26 March 2022

Last Day of our Delhi Visit on 25-03-2022. Com D Gopalakrishnan Vice President CHQ, Com Anupam Koul AGS, Com T S Vittoban Treasurer CHQ, Veteran Leader Com M K Bagchi and myself met Parliamnetary Affairs minister Shri Pralhad Joshiji and requested his help. He immediately phoned MOC and requested him to meet the delegation. So, we met Hon'ble MOC Shri Ashwin Vaishnaw ji and handed over letter on PENSION REVISION. He was very very positive and assured to help because the demand is genuine. When we told him that we are waiting for the past five years he told " I am sorry".

Later We met Sri Rajaraman, Telecom Secretary in Electronics Niketan and presented a detailed four pages letter. We explained the issue and stand taken by DOT hitherto. We requested him to review the decision taken by Establishment section, which had the approval of the then Secretary. We also informed him about our meeting with MOC. He asked how many pensioners would get the benefit. After hearing our explanation he marked the letter to Member (S) . He also assured to take necessary action and revert back to us.







Monday 14 March 2022

 


அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 12-03-2022 மாலை 4.00 மணியளவில் கிளை தலைவர் தோழர் A இஸ்மாயில் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தலைவர் தொடக்க உரையுடன்  கடந்த இரண்டு ஆண்டுகளில் இயற்கை எய்திய தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது கிளை செயலர் B.தியாகராஜன் கிளை மாநாடு நடத்துவது குறித்து பேசினார். கூட்டத்தில் அதற்கான திட்டங்கள் குறித்து  விவாதித்து ஏப்ரல் 13ல்  மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில செயலர் தோழர் S.தங்கராஜ் அவர்கள் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றியும் மாநில மாநாடு சம்பந்தமாகவும், நீதிமன்ற வழக்குகள் ஓய்வூதிய பிரச்சனை பற்றியும் பேசினார்.கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். தோழர் G.அரி, K.பாண்டியன் ஆகியோர் பேசினர்.
தோழர் K N மோகன் நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.
 
B.தியாகராஜன்
கிளை செயலர் அம்பத்தூர்

 " KYP "  SUBMISSION NOTIFICATION: