Thursday, 22 May 2025

 

தோழர்களே, ஏழாவது மாநில மாநாட்டிற்கு பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளின் முதல் கூட்டம்  21 05 2025 அன்று பழவந்தாங்கலில்  உள்ள டிராபிக் ஓய்வூதியர்  சங்க அலுவலக கட்டிடத்தில் மாலை 3-00  மணி அளவில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முனுசாமி அவர்கள் COB  ஏன் கூட்டப்படுகிறது என்பதை விளக்கி இந்த நடைமுறை மாநில செயலாளர் தோழர் ஒளி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது மாநில செயற்குழு நடப்பதற்கு முன்பு நடைபெற வேண்டும் என்ற விருப்பத்திற்கு இணங்க இது கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து கூட்டத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து,  மாநில மாநாட்டிற்கும் இன்றைய கூட்டத்திற்கும் இடையில் மறைந்த தோழர்களுக்கும் பகல்காம் தீவிரவாத தாக்குதலில் மரணம் அடைந்த பொதுமக்கள் இன்னுயிர் நீத்த வீரர்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து தலைவர் அவர்கள் மாநில நிர்வாகிகளின் முதல் கூட்டம் என்பதால் அனைவரையும்  அறிமுகம் செய்து கொள்ள அறிவுறுத்தினார்.அதன்படி அனைவரும் தங்களது பெயர், கிளை, மற்றும் பொறுப்புக்களை கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

பிறகு மாநில செயலாளர் அவர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து ஒருமித்த கருத்துடன் தன்னை மாநில செயலாளராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்தார். மாநில நிர்வாகிகள் ஒத்துழைப்புடனும் மூத்த தோழர்களின் அறிவுரையின்படியும் வருகின்ற காலத்தை மிகச் சிறப்பாக சங்கத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அனைவருடைய ஒத்துழைப்பையும் வேண்டி கேட்டுக் கொண்டார். மாநில செயற்குழுவிற்கு முன்பு மாநில நிர்வாகிகள் கூட்டம் என்ற கான்செப்ட் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். மாநில செயற்குழுவிற்கு முன்பு முக்கியமான விஷயங்களை மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கும் போது நல்ல தெளிவுகள் கிடைக்கும், அதை தொடர்ந்து மாநில செயற்குழுவை நடத்தும் பொழுது அந்த எண்ணங்கள் மீண்டும் மெருகேறும் என்ற நம்பிக்கையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் இனி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாநிலத் தலைவர் தோழர் முனுசாமி அவர்கள் தலைமை உரையில் சங்கத்தின் முன்னால் இருக்கக்கூடிய பிரச்சனைகளை பென்ஷன் ரிவிசன் நீதிமன்ற வழக்கு விவரம் , 8 th CPC, பைனான்ஸ் வேலிடேஷன் பில் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார் அதை தொடர்ந்து அகில இந்திய அளவில் மத்திய மாநில ஓய்வூதியர் சங்கங்கள்  சுமார் 55 சங்கங்கள் இணைத்து அதனுடைய செயலாளர் தலைவர் ஆகியோர் உள்ள குழுவில்  இந்த விஷயத்தை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் Notional இன்கிரிமென்ட் VRS தோழர்களுக்கு கிடையாது என்ற சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து clarification வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் அகில இந்திய மாநாட்டிற்கு மாநில மாநாட்டின் மெம்பர்ஷிப் ஸ்டேட்டஸ் படி 100 மெம்பர்களுக்கு ஒரு டெலிகேட் என்ற வகையில் டெலிகேட் தேர்வு செய்யப்பட வேண்டும் அது குறித்து மாநில செயலாளர் சுற்றறிக்கை அனுப்புவார் என்று தெரிவித்தார். தொடர்ந்து whatsapp குரூப்ஸ் மாநில சங்க நிர்வாகிகளுக்காக ஒரு குரூப், மாநில செயற்குழு உறுப்பினர்களுக்காக ஒரு குரூப் ஏற்படுத்தப்பட்டுள்ளது  என்று தெரிவித்தார். தொடர்ந்து ஏழாவது மாநில மாநாடு குறித்து ஆய்வு என்ற தலைப்பின் கீழ்  DGM சீனிவாசன் அவர்கள், தோழர் பாண்டியன் அவர்கள், தோழர் ரவிக்குமார் அவர்கள், தோழர் அஞ்சனவாணன் அவர்கள் உரையாற்றினார்கள். தோழர் சீனிவாசன் அவர்கள் மிகச் சிறப்பாக நடந்தது என்று குறிப்பிட்டு சொசைட்டி விஷயத்தை சற்று கவனமாக கையாண்டிருக்க வேண்டும் என்று சொன்னார். தோழர் பாண்டியன் அவர்கள் மாநாட்டின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்ததோடு தோழர் தங்கராஜ் தோழர் கண்ணப்பன் மற்றும் அனைத்து குழுக்களுக்கும் மிக சிறப்பாக பணியாற்றியதை குறிப்பிட்டுவாழ்த்துக்கள் சொல்லி முக்கிய விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட இடர்பாடை சுட்டிக்காட்டினார். திரு ரவிக்குமார் அவர்கள் குழு தலைவருக்கு நிதி ஒதுக்கப்படாததால் மெட்டீரியல்ஸ் வாங்குவதற்கு சிரமப்பட்டதாக குறிப்பிட்டார். உணவு குழுவில் போதுமான நபர்கள் சேர்க்கப்படவில்லை என்று திரு அஞ்சனவாணன் அதிருப்தி தெரிவித்தார். அகில இந்திய துணைத் தலைவர் தோழர் ரங்கநாதன் அவர்கள் மாநாடு சிறப்பாக நடந்ததற்கு வாழ்த்து தெரிவித்து இனி ஒரு நாள் மாநாடு போதுமானது என்று குறிப்பிட்டு கமிட்டி தலைவர்களுக்கு முன்கூட்டியே நிதி வசதி செய்து தர வேண்டும் என்று ஆலோசனை கூறினார் சொசைட்டி விவகாரத்தில் சங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசி மாநில சங்க நிர்வாகிகள் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து முன்னாள் மாநிலச் செயலாளர்  தோழர் எம் கோவிந்தராஜன் அவர்கள் COB  கான்செப்ட் வரவேற்று ஒரு நல்ல முயற்சி என்று சொன்னார் மாநாடு வெற்றி பெற்றதற்கு அனைத்து குழுக்களும் சிறப்பாக பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.

தோழியர் அம்புஜவல்லி பேசும் பொழுது பெண் உறுப்பினர்கள் மாநில சங்க நிர்வாகிகள் பட்டியலில் தான் ஒருவர் மட்டுமே இருப்பதாகவும் இது மிகுந்த மன வருத்தத்தை தருவதாக குறிப்பிட்டார் இனிவரும் காலங்களில்  அதிகமாக பெண் உறுப்பினர்கள் கொண்ட கிளைகளில் இருந்து மாநில சங்க நிர்வாகிகள் பட்டியல் கொடுக்கும் பொழுது கிளைச் செயலாளர்கள் கண்டிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை தந்து அந்த பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இதை அனைவரும் ஆமோதித்தனர். அதுபோலவே மாநில மாநாட்டில் மாநில சங்க நிர்வாகிகள் அனைவரையும் மேடைக்கு அழைத்து சிறப்பு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார் மேலும் செயலர் உரை கண்டிப்பாக படிக்கப்பட வேண்டும் அதற்கு ஏற்றார் போல் ஓபன் செஷன் மற்றும் மாநாட்டு நிகழ்வுகள் முறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தலைவர் அவர்கள் இதுகுறித்து தக்க முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் தங்கராஜ் அவர்கள் மகாநாடு வெற்றி அடைந்ததற்கான நிகழ்வுகளை பட்டியலிட்டார் தான் அழைத்திருந்த எல்லோரும் வந்ததாகவும் அகில இந்திய தலைவர் அகில இந்திய செயலாளர் அகில இந்திய பொருளாளர் ஆகிய மூவரும் ஒரு மாநில மாநாட்டில் கலந்து கொள்வது இதுதான் முதன்முறை என்றும் அதுவே மிகப் பெருமை வாய்ந்தது என்றும் குறிப்பிட்டார் வாட்சப் குரூப்பில் தோழர்கள் மற்ற குரூப்பில் உள்ள செய்திகளை பார்வர்ட் செய்யும் பொழுது கவனித்து பார்வேர்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தோழர் சண்முகசுந்தரம் அனைவரையும் வாழ்த்தி முழு ஒத்துழைப்பு தருவோம் என்று குறிப்பிட்டார் முன்னாள் மாநில செயலாளர் மாநில தலைவர்களுக்கு சிறப்பு செயற்குழு உறுப்பினர் என்ற அந்தஸ்து தர வேண்டும் என்று ஆலோசனை குறிப்பிட்டார்.

மாநில பொருளாளர் குணசேகரன் அவர்கள் அமைப்பு நிலை குறித்து மிக விரிவாக பேசினார் மாநில நிர்வாகிகளுக்கு வேலை பங்கீடு அதாவது ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் உதாரணத்திற்கு CCA  பிரச்சனைகள், CGHS  பிரச்சனைகள், சொசைட்டி பிரச்சனைகள், கிளை பிரச்சனைகள் மெம்பர்ஷிப் பிரச்சனைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குழு அமைத்து மாநில நிர்வாகிகளை அந்த குழுக்களில் பங்கு பெற செய்து அதன் மூலம் நிர்வாகம் செய்யும் பொழுது அதிகப்படியான பிரச்சனைகளை மிக சுலபமாக தீர்த்துவிட முடியும் என்று ஆலோசனை கூறினார் அதேபோல மாநில செயற்குழு முடிவுகளை அமல்படுவது முன்னேற்றம் குறித்து ஒரு குழு கண்காணிக்க வேண்டும் கிளை கூட்டங்கள் நடத்தும் பொழுது ஓவர்லாப் இருக்கக் கூடாது அப்பொழுது தான் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று குறிப்பிட்டார் எப்படி மாநில செயற்குழுவிற்கு முன்பு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கின்றதோ அதுபோல கிளை கூட்டங்களும் பொதுக்குழுவிற்கு முன்பு செயற்குழுக் கூட்டி விவாதிக்க வேண்டும் அந்த செயற்குழு முடிவுகள் என்ன அதை செயல்படுத்தப்பட்டதா? என்பதை அந்தந்த கிளை செயலாளர் இதுபோன்ற குழுக்களை அமைத்து செயல்படுத்தினால்  சங்கம் மிகுந்த வளர்ச்சி அடையும் என்று குறிப்பிட்டார் சங்க சட்ட விதிகளை மொழிபெயர்த்து  அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் மாநில சங்க நிர்வாகிகளுக்கும் தர வேண்டும் என்று குறிப்பிட்டார் மாநில சங்கத்தின் உறுப்பினர்கள் விவரம்,கிளைகளின் உறுப்பினர் விவரம்,  அகில இந்திய சங்க உறுப்பினர் விவரம் ஆகியவைகளில்  மாறுபாடு உள்ளது ஆகவே உறுப்பினர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார் கிளைகள் பிரிந்த பின்பு மெம்பர்ஷிப் வெரிஃபிகேஷன் அந்தந்த கிளை செயலாளர்கள் மாநில சங்க நிர்வாகிகளுடன் அமர்ந்து சரிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார் உறுப்பினர்கள் மாறி சென்றால் தனி பார்மெட் பைபர்கேஷன் ஆகி சென்றால் தனி பார்மெட் என்று இருந்தால் மெம்பர்ஷிப்  சரி பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் அவர்கள் திரு குணசேகரனிடம் கணக்கு வழக்குகளை FD, PAN card, பேங்க் பாஸ்புக் போன்ற முக்கிய ஆவணங்களை ஒப்படைத்தார் உதவி பொருளாளர் தோழர் சுப்பிரமணியத்தின் பங்கை மிகச் சிறப்பாக இருந்ததாக எடுத்துரைத்தார் 2012ல் 370 வாழ்நாள் உறுப்பினர்கள் 173 ஆனுவல் மெம்பர்கள் உடன் தொடங்கியதாகவும் இன்று 5932 மெம்பர்கள் உள்ளதாக பெருமையுடன் குறிப்பிட்டார் அது போலவே அகில இந்திய தலைமை சென்னை தொலைபேசி மாநிலத்தை முன்னுதாரணமாக பல விஷயங்களில் எடுத்துக் கொண்டுள்ளது எப்பொழுதும் இயற்கை பேரிடர் வந்தாலும் வர்தா புயல் காஜா புயல் போன்ற நிகழ்வுகள் எல்லாம் சென்னை மாநிலம் தான் நிதி வசூலித்து வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டதன் மூலம் சென்னை மாநில சங்கத்தின் மீது அகில இந்திய தலைமைக்கு உள்ள ஒரு நம்பிக்கையை எடுத்துக்காட்டினார் அதேபோல  நமது சங்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்ததை பெருமையுடன் குறிப்பிட்டார் வேறு எந்த சங்கமும் இதுபோல் செய்ததில்லை என்று சொல்லி இதற்கு நம்முடைய நிதி வரவு செலவு கணக்கு மிக சிறப்பாக செய்வதனால் இந்த பெருமை கிடைத்துள்ளது இது தொடர வேண்டும் என்று குறிப்பிட்டார் தொடர்ந்து  முன்னாள் மாநில செயலாளர் தோழர் தங்கராஜ் அவர்கள் மாநில செயலாளர் ஒளியிடம் தன்னுடைய ஆவணங்களை ஒப்படைத்தார்.

உதவி செயலாளர் தோழர் பாண்டியன் நன்றி கூற மாநில சங்க நிர்வாகிகள் கூட்டம் இனிதே நிறைவுற்றது


No comments:

Post a Comment

  A well attended Circle Executive Committee meeting was conducted in Jivana Jyoti Hall, Pantheon Salai, Egmore Chennai -8 under the preside...