Tuesday, 17 January 2023

 

இன்று காலை 10-00 மணி அளவில் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி சங்கம் CCA அலுவலக வளாகத்தில் இணைந்து நடத்திய இரண்டாம் கட்ட முதல் நாள் தர்ணா போராட்டம் மிக வெற்றிகரமாக நடைபெற்றது. சுமார் 400 தோழர்களுக்கு மேல் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள்விண்ணதிர கோஷங்கள் எழுப்பப்பட்டன

தோழர் D. பாலசுப்ரமணியன் AIFPA பொதுசசெயலாளர் துவக்கி வைத்து உரையாற்றினார் . தோழர் D. கோபாலகிருஷ்ணன் CHQ தலைவர் , மற்றும் தோழர்கள் V ராமராவ் ,. A .சுகுமாரன், V. ரத்னா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள் .இரண்டாம் கட்ட இரண்டாம் நாள் தர்ணா நாளையும் (18-01-2023) CCA அலுவலக வளாகத்தில் நடைபெறும் . அதில் இன்று கலந்துகொண்டவர்களை விட , இன்னும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பேச்சாளர்களும் கோரிக்கை விடுத்தார்கள்.

தோழர்களே நாளை அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு , நம் கோரிக்கை வென்றடைய  பாடுபடுவோம்

No comments:

Post a Comment

  EXTRA INCREMENT CASE Today our extra increment case came in Madras High court as item No:13 before court No: 5. Arguments on both sides co...