Monday, 18 November 2019

கோடம்பாக்கம் கிளையின் 13 வது பொதுக்குழு கூட்டம் 16-11-2019 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தோழர் .V.R. கிருஷ்ணன் தலைமை ஏற்றார் . கிளை செயலர் S.சாம்பசிவம் அனைவரையும் வரவேற்றார் டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற இருக்கும் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். கோடம்பாக்கம் கிளை மாநாடு 2020 ஜனவரி மாதம்  11ஆம்  தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தார். வழக்கம் போல இந்த மாநாடு மாற்றாரும் போற்றும் வகையில் நடைபெற ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார் .
கூட்டத்தில் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் G நடராஜன் , சென்னை மாநில செயலர் தோழர் S. தங்கராஜ், மாநில பொருளர் தோழர் M. கண்ணப்பன், மாநில உதவி செயலர் தோழர் S.கிருஷ்ணமூர்த்தி ,மற்றும் மாநில பொறுப்பாளர்கள் தோழர் வாசுதேவன் , தோழர் டோமினிக் , தோழர் கோவிந்தராஜூலு ஆகியோர் உரையாற்றினர் . தற்போதுள்ள BSNL VRS நிலைமை, VRS  ல்  ஓய்வு பெற்று வருவோரை வரவேற்று நம் சங்கத்தில் சேர்க்க வேண்டும், CGHS  ல் சேர்ந்தால் அதன் பயன்கள் , 7வது CPC  , அமைச்சரை சந்தித்தது ஆகியவை குறித்து பேசினார்கள் .கிளை உதவி செயலர் தோழர் K .பார்த்திபன் நன்றி நவில கூட்டம் இனிது முடிவுற்றது.

No comments:

Post a Comment

  A well attended Circle Executive Committee meeting was conducted in Jivana Jyoti Hall, Pantheon Salai, Egmore Chennai -8 under the preside...