Monday, 14 October 2019


அனைத்து இந்திய BSNL ஓய்ஊதியர் நல சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 12-10-2019 அன்று தலைவர் தோழர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. தலைவர் அவர்கள் CGHS சம்பந்தமாக விரிவாக எடுத்துரைத்தார். கிளை செயலர் தோழர் B.தியாகராஜன் அவர்கள் உறுப்பினர் பிரச்சனை மற்றும் KYP/Life certificate கொடுப்பது சம்பந்தமாக பேசினார். அகில இந்திய துணை  பொதுச்செயலாளர் தோழர் V.ரத்னா அவர்கள் CGHS/Pension revision சம்பந்தமாக விரிவாக பேசி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து தெளிவுபடுத்தினார். பின்னர் கிளையின் சார்பாக துண்டு அனிவித்து கௌரவிக்கப்பட்டார்.  மாநிலர் செயலர் தோழர் S. தங்கராஜ் அவர்கள் மாநில மாநாடு குறித்து  உரையாற்றினார். 
அண்ணா நகர் கிளயின் செயலாளர் தோழர் V.N. சம்பத்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 5 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு அறிமுக படுத்தப்பட்டனர் கிளை துணை  செயலர் தோழர் K.N.மோகன் நன்றி நவில
கூட்டம் முடிவுற்றது.


No comments:

Post a Comment

  Annual GB for Kanchipuram Branch was conducted on 05-05-2026 successfully. All the office bearers have been elected unanimously. A gist of...