Monday, 10 June 2019


அனைத்து இந்திய BSNL ஓய்ஊதியர் நல சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 8-6-19 அன்று தலைவர் தோழர் A.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலர் B.தியாகராஜன் கிளையின் உறுப்பினர் இருவரின் பிரச்சினை அதாலத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டி காட்டி பேசினார். துனை மா. செய்லர் தோழர் T.ஜீவானந்தம் மெடிக்கள் பில் பற்றி விளக்கி பேசினார்.மா.து.செயலர் தோழர் S.சுப்பிரமணியன் தற்பொழுதய பென்சன் வழங்கும் முறை பற்றி உரையாற்றினார். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாநில செய்லர் தோழர் S.தங்கராஜ் அவர்கள் உறுப்பினர் சேர்க்கை கோர்ட் கேஸ் பென்சன் ரிவிசனுக்காக நாம் எடுத்த முயற்சிகள் குறித்து விளக்கமாக பேசினார்.கி..செயலர் தோழர் K.நல்லுசாமி நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.அம்பத்தூரில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 166 ஆகும் . இம்மாதம் 4 புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன .
B.தியாகராஜன்
கி.செயலர் அம்பத்தூர்.









No comments:

Post a Comment

  IDA FROM JULY 2026 INCREASE ORDER RELEASED