Sunday 12 May 2019

சென்னை தொலைபேசி மாநிலத்தின் முதல் கிளையான சைதாப்பேட்டை கிளையின் ஐந்தாவது கிளை மாநாடு சிறப்பாக 12 -05 -2019  மாலை 3-௦௦ மணியளவில் ஆக்ஸ்போர்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அகில இந்திய மத்திய சங்க உதவி பொது செயலர் தோழியர் ரத்னா, மாநிலத் தலைவர் தோழர் முனுசாமி , மாநில செயலர் தோழர் தங்கராஜ் , மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன், மாநில முன்னாள் தலைவர் தோழர் மூர்த்தி , மாநில துணைத்தலைவர் தோழர் ரங்கநாதன் மற்றும் பல்வேறு கிளைகளை சார்ந்த பொறுப்பாளர்கள் , மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . சென்னை தொலைபேசி மாநிலத்தின் முதற்கிளையாக உருவாகி இன்று நல்ல வளர்ச்சியுற்று தன்னிடத்தே 237 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கிளையை வாழ்த்திப் பேசினார்கள், இன்னும் வளர வாழ்த்து தெரிவித்தார்கள் .
பின்னர் நடைபெற்ற கிளைத் தேர்தலில் பின்வரும் தோழர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள் 
தலைவர் தோழர் வி. எஸ். சந்திரபாபு,
செயலர்  தோழர் ஜி. வீரபத்திரன் ,
பொருளாளர் தோழர் எல். பூமால்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன .
கடும் சுட்டெரிக்கும் வெய்யிலின் தாக்கத்தினையும் பொருட்படுத்தாமல் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆண்டு விழாவை சிறப்பித்தார்கள்.









   

No comments:

Post a Comment

 " KYP "  SUBMISSION NOTIFICATION: