Sunday 23 December 2018

செங்கல்பட்டு கிளையின் கூட்டம், கிளைத்  தலைவர் தோழர் ரங்கநாதன் தலைமையில் மிக சிறப்பாக 22-12-2018 அன்று மாலை 4-00 மணி அளவில் வேணு கல்யாண மஹாலில் நடைபெற்றது. கிளைச் செயலர் தோழர் C .ஒளி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்  
கிளையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 223 என்றும் அனைவருமே ஆயுட்கால உறுப்பினர் என்று மகிழ்ச்சியுடன் பலத்த கைத்தட்டல் களுக்கிடையே அறிவித்தார் . இந்த மாதம் மட்டும் 9 புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தன்னடக்கம் கலந்த பெருமையுடன் கூறினார். சிறப்பு விருந்தினர்களாக தோழர் தங்கராஜ் மாநில செயலர் மற்றும் தோழியர் V .ரத்னா அனைத்திந்திய உதவி செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கேவா ஆயுர்வேத ஹெல்த் அவார்னஸ் புரோகிராம்  ஆரோக்கியம் & ஐஸ்வர்யம்  மதியம் 2 மணி முதல் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்திருந்த எல்லோரும் இந்த அறிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டார்கள் .இதைப்போன்ற நிகழ்ச்சிகளை மற்ற கிளைகளும் முயற்சிக்கலாம். 
கூட்டத்தில் சுமார் 72 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். செயலரின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. 















No comments:

Post a Comment

  A list of pensioners names whose Life Certificate Validity expires on 30-04-2024 is posted below. A LINK is given by clicking the link the...