Thursday 5 September 2024

 

வில்லிவாக்கம் கிளை, தங்களது 6 வது ஆண்டுவிழாவினை மிக சிறப்பாக ஸ்ரீ காமகோடி மினி கல்யாண மண்டபம் , வில்லிவாக்கத்தில் 31-08-2024 அன்று மதியம் 2-00 மணிக்கு நடத்தியது. சங்கக்கொடியினை மாநிலத்தலைவர் தோழர் முனுசாமி ஏற்றிவைத்தார் , விண்ணதிர கோஷங்கள் எழுப்பப்பட்டன .தோழர் P .கங்காதரன் ஒரு திருக்குறள் செய்யுள் உரையுடன் ,தலைமையேற்று நடத்தினார் . அஞ்சலிக்குப் பின் தோழர் A.S . வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்த , தோழர் T.S . சிறப்புரையாற்றினார் .

கிளையின் செயற்பாட்டறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்து பலத்த கைத்தட்டல்கள் மூலம் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன . 

வாழ்த்துரையாக தோழர் M . முனுசாமி , மாநிலத்தலைவர், தோழர் G. நடராஜன் முன்னாள் மத்திய சங்க பொதுச் செயலாளர் , தோழர் M .அரங்கநாதன் மத்திய சங்க துணைத்தலைவர் , தோழியர் V. ரத்னா , மத்திய சங்க உதவி பொதுச் செயலாளர் , M .கோவிந்தராஜன் சென்னை மாநில துணைத்தலைவர் , தோழர் P .சுப்ரமணியன் சென்னை மாநில உதவி செயலாளர் , M .கண்ணப்பன் சென்னை மாநில பொருளாளர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள் .

புதிய நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக நிறைவேறியது. தோழர்கள் கங்காதரன், வைத்தியநாதன் மற்றும் கெளரி ஆகியோர் முறையே கிளை தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

தோழியர் கெளரி நன்றியுரை நிகழ்த்த , மாநாடு இனிய நினைவுகளுடன் இனிதே நிறைவேறியது.

அரங்க அமைப்பு நன்றாக இருந்தது. சுமார் 200 பேர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இன்சுவை சிற்றுண்டி பரிமாறப்பட்டது.

வீடியோ நிகழ்வுகளைக் காண மெளஸ் பாய்ன்டெரால் முக்கோண ஐகான்  மீது கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment