Friday 20 March 2020


அன்புத் தோழர்களே ,
வணக்கம்.
உலகமெங்கும் கொரானா வைரஸ் நோய் தன் கோரப்பிடியினை மனித உயிர்களின் மேல் தாக்கி மரணமடையச் செய்து வருகிறது . இந்தியாவிலும் , தமிழ்நாட்டிலும் கொரானா வின் தாக்கம் இருப்பதாக செய்திகள் வருகின்றன .தமிழ்நாட்டில் ஒரு சிலர் இந்நோயினால் மரணமடைந்துள்ளதாக அறிவிப்புகள் வருகின்றன.
இந்நோய் மனிதர்கள் மூலமாக , காற்றில் பறந்து தாக்குகிறது .60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களை கொரானா வைரஸ் மிக சுலபமாக தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவல் .
இந்நோய் பரவுவதை தடுக்க நாம் வீட்டிலேயே இருந்து விட்டால் நம்மை காத்துக் கொள்ள முடியும். நம் பாரத பிரதமரும் தம் தேசிய பரப்புரையில் 22-03-2020 ஞாயிறு காலை 7-00 மணியிலிருந்து இரவு 9-00 மணிவரை வெளியில் எங்கும் போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி கூறியுள்ளார். அதைப்போல நாமும் ஞாயிறு அன்று எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மையும் , நாட்டையும் கொரானா நோயிலிருந்து பாதுகாப்போம் .
இந்த அறிவுரை செய்தியை நம் தோழர்கள் , மற்றும் அனைத்து நண்பர்கள் , உறவினர்களுக்கும் எடுத்துக் கூறி அறிவுறுத்தவும்.
நம் நலம் காப்போம் !  தேசத்திற்கு  வளம்   சேர்த்திடுவோம். 
தோழமை வாழ்த்துக்களுடன் 
S . தங்கராஜ் ,
மாநில செயலர் ,
மற்றும் சங்க நிர்வாகிகள்.
AIBSNLPWA  
சென்னை தொலைபேசி மாநிலம்.


No comments:

Post a Comment

  A list of pensioners names whose Life Certificate Validity expires on 30-04-2024 is posted below. A LINK is given by clicking the link the...