Monday, 28 September 2020

 






 

வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் .தோழர் முவர் பாஷா , வயது 64, மே 2014ல் ஒய்வு பெற்ற ரிக்கார்ட் கீப்பர் AOTR  செக்சன் அவர்கள் 26-09-2020 அன்று மாலை இயற்கை எய்தினார் ( கொரோனாவால் அல்ல ) . அன்னாரது உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை கூறுகிறோம். அவரது ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டுகிறோம்.

அவரது கைப்பேசி எண் : 94453 77232,
இல்லம்: 044-2813 3579.

Saturday, 26 September 2020

 

அனைத்து ஓய்வூதியர்கள்  கவனத்திற்கு ,
Ddgm / HR ( Admn )  அலுவலகம் 10 மில்லர்ஸ் ரோட்  லிருந்து 78. புரசைவாக்கம் ஹை ரோட் -ல் உள்ள தலைமை பொது மேலாளர் அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட்ட உள்ளது. இந்த அலுவலக மாற்றல் காரணமாக சரண்டர் சர்டிபிகேட் பணிகள் தற்காலிகமாக 28-09-2020 லிருந்து 04-10-2020 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது .
05-10-2020 முதல் DGM  ஆபிஸ் இயங்கத் துவங்கும்ஓய்வூதியர்கள் ID கார்டுகள் இன்னமும் தயாராக இல்லாத காரணத்தால் ID கார்டு வழங்கும் பணியும்  15-10-2020 வரை ஒத்தி வைக்கப்படுகிறது.

ஓய்வூதியர்களுக்கு ஏற்படும் அசைவுகரியத்திற்கு மிகவும் வருந்துகிறோம். என்றும் உங்கள் சேவையில்,

DGM / HR (Admn )
மற்றும்
குழுவினர்



SBI வங்கியில் பென்ஷன் கணக்கு வைத்திருக்கும் SAMPANN பென்ஷனர்கள் அவர் அவர்களது கிளைகளியே LIFE CERTIFICATE வசதி செய்து கொடுப்பதற்கு SBI வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.  அதற்கு பென்ஷனர்கள் கீழே கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் செயல்படவேண்டும். 
1. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் செல்லவேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர் அவைகளை சரிபார்த்து எழுத்து பூர்வமான் LIFE CERTIFICATE ஐ பென்ஷனர்களுக்கு வழங்குவார். அதை பென்ஷனர்கள் CCA அலுவலகத்திற்கு அனுப்பிக் கொள்ளலாம்.
அல்லது
2. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் சென்றால்  JEEVAN PRAMAAN மூலமாக DIGITAL LIFE CERTIFICATE கொடுப்பதற்கும் SBI அதிகாரிகள் உதவி செய்வார்கள்
இதற்கான SBI வங்கி உத்தரவினை கீழே கொடுத்துள்ளோம்.

 


Friday, 25 September 2020

 

                                                        வருந்துகின்றோம்.
 தோழர்களே. சிறந்த பண்பாளர்,  பன்மொழி
பாடகர்,  இசை அமைப்பாளர்,  பாடகர், அகில இந்திய அளவில் மிக அதிகமான பாடல்களை பாடியுள்ளவர்,   பெரும் மதிப்பு கொண்ட  திரு S P பாலசுப்பிரமணி அவர்களின் மரண செய்தி  கேட்டு அதிர்ச்சி அடைகிறோம்.
அவரது மறைவினால் இழந்து தவிக்கும் குடும்பத்தார்க்கும் திரை இசை கலைஞர்களுக்கும் கோடான கோடி இசை ரசிகர்களுக்கும் நமது மாநில சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின்ஆன்மா சாந்தி   அடைய இறைவனை வேண்டுகிறோம்.
S.தங்கராஜ்.
மாநில செயலர்


  CONTACT DETAILS FOR PERNSIONERS