Wednesday 7 February 2024

 





06.02.2024 இன்று  ஓய்வு பெற்ற நல சங்கத்தின் பூந்தமல்லி கிளையில் முதல் மாநாடு குமணன்சாவடி தொலைபேசி இணைப்பகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது இதில் மொத்தம் 60 தோழர்கள் தோழிர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர் அதில் மாநிலம் அகில இந்திய மற்ற கிளைகள் சார்பாக 15 பேர்கள் கலந்து கொண்டனர் என்பதில் கிளைக்கு பெரும் மகிழ்ச்சி இருந்தாலும் கிளையின் உறுப்பினர்கள் சில பேர் கிளை மாநாட்டிற்கு வராமல் இருந்தது மிகவும் மனம் வருத்தம் அடைகிறது வரும் காலங்களில் அனைவரும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் புதிய நிர்வாகிகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
சென்னை தொலைபேசி மாநிலத் தலைவர் தோழர் M .முனுசாமி தலைமையில் நடத்தப்பட்ட தேர்வில்  கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
கிளைத் தலைவர் : தோழர் .R . நாராயணசாமி
செயலாளர்              :   தோழர் R . சம்பத்
பொருளாளர்          :  தோழர்  M சந்திரபாபு
மீண்டும்  கிளை   செயலராக என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததற்கு அனைவருக்கும் என்னுடைய நன்றியினை  தெரிவித்துக் கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி !!!
R. சம்பத் 
 கிளை செயலாளர்

No comments:

Post a Comment

  தோழர்களே , அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் . மேதினி போற்றும் தொழிலாளர் தினமான இன்று காலை 10-00 மணியளவில் அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தி...